Monday, February 2, 2009

பகமை கொள்வது கூடாது!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்)


அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

ஒருவருக்கொருவர் பகமை கொள்வது, உறவை முறிப்பது, புறக்கணிப்பது கூடாது!

அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். (அல்லகுர்ஆன் : 49:10)

அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''நீங்கள் ஒருவருக்கொருவர் பகமை கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். புறக்கணிப்பு செய்து கொள்ளாதீர்கள். உறவுகளைத் துண்டித்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் அடிமைகளாக – சகோதரர்களாக ஆகி விடுங்கள். ஒரு முஸ்லிம், தன் சகோதரனை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருப்பது கூடாது'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
(ரியாளுஸ்ஸாலிஹீன்:1567 )


அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்:
''திங்கள்கிழமையும், வியாழக்கிழமையும் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படும். அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காத அனைவருக்கும் மன்னிப்பு வழங்கப்படும். ஆனால் ஒருவருக்கும், அவரின் சகோதரருக்கும் பகைமை இருக்கும் மனிதனைத் தவிர, ''இவ்விருவரும் (இணக்கமாக) ஆகும் வரை பொறுத்திருங்கள். இந்த இருவரும் ஒற்றுமை ஆகும் வரை பொறுத்திருங்கள் என்று கூறப்படும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1568 )


பொறாமை கொள்வது கூடாது!
(மார்க்கம் மற்றும் உலகத்தின் நன்மை எதுவாயினும், அது உள்ளவனிடமிருந்து அவை நீங்கிட விரும்புவதே பொறாமையாகும்).

அல்லாஹ் கூறுகிறான்:
அல்லாஹ் தனது அருளை இம்மக்களுக்கு வழங்கியதற்காக அவர்கள் பொறாமை கொள்கிறார்களா? (அல்குர்ஆன் : 4:54)

அபூஹூரைரா (ரலி) அறவிக்கின்றார்கள்:
'' பொறாமை கொள்வது பற்றி உங்களை எச்சரிக்கிறேன். நெருப்பை விறகு சாப்பிடுவது போல் (அல்லது காய்ந்த வைக்கோலைத் தின்பது போல்) நன்மைகளை பொறாமை சாப்பிட்டு விடும்''என்று நபி(ஸல்) கூறினார்கள். (அபூதாவூது)(ரியாளுஸ்ஸாலிஹீன்:1569 )

''ஒவ்வொரு தூதரும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் - நபிகள் நாயகம் (ஸல்)''. (நூல்: புகாரி, முஸ்லிம்)
'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''